தேசியம்
செய்திகள்

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Ontario தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 800க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்ற அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

சுகாதார அதிகாரிகள் 811 புதிய தொற்றுக்களை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தனர்.

இது Ontarioவில் நான்காவது அலையின் அதிக எண்ணிக்கையான 944 தொற்றுக்களை அதிகாரிகள் அறிவித்த ஒரு நாளின் பின்னர் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 688 ஆக இருந்த புதிய நோய்த்தொற்றுகள் ஏழு நாள் சராசரி எண்ணிக்கையும் 757 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மூன்று மரணங்களையும் அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Related posts

Liberal கட்சியின் வேட்பாளராகும் முன்னாள் காவல்துறையின் பிரதி தலைவர்

Lankathas Pathmanathan

Mexicoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

2024 Paris Olympic: மூன்றாவது தங்கம் வென்ற கனடியர்

Lankathas Pathmanathan

Leave a Comment