தேசியம்
செய்திகள்

ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள சிறப்பு குழு உருவாக்கம்

ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள கனடா குழு ஒன்றை உருவாக்குகிறது.

ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு குழுவை உருவாக்கவுள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் மேலும் 62 தனிநபர்கள், ஒரு ரஷ்ய இராணுவ அமைப்பை உள்ளடக்கும் வகையில் கனடா தனது தடை பட்டியலை விரிவுபடுத்துகிறது.

அனுமதிக்கப்பட்டவர்களில் பல ரஷ்ய கூட்டாட்சி ஆளுநர்கள் பிராந்திய தலைவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக கனடிய அரசாங்கம் கூறுகிறது.

உக்ரைனை ஆதரிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் Trudeau இந்த புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்.

Related posts

Liberal கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் தமிழர்!

Lankathas Pathmanathan

Toronto Pride கொண்டாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment