September 15, 2026
தேசியம்
செய்திகள்

ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான திருடப்பட்ட பொருட்களை மீட்ட Toronto காவல்துறை

Toronto காவல்துறையினர் 1 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.

திருட்டு சம்பவங்கள் குறித்த காவல்துறையினரின் இந்த விசாரணையில் ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன

கடந்த கோடை காலம் முதல் நிகழ்ந்த தொடர்ச்சியான வாகன திருட்டுகள், ஆயுதமேந்திய கொள்ளைகள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து குற்றச் சாட்டுகள் பதிவானதுடன் திருடப்பட்ட பொருட்கள் மீட்டுள்ளன.

புதன்கிழமை (05) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதான Amir Inyat (Brampton), 25 வயதான Shais Ejaz (Brampton), 32 வயதான Mohammad Habib (Toronto), 21 வயதான Kausar Rahimzada (Toronto), 22 வயதான Steven Singh (Brampton) ஆகியோரின் விபரங்கள் வெளியிடப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் 15 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குகின்றார்.

இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் காரணமாக இவருடைய பெயரை வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto நகரசபை தேர்தலில் நீதன் சான் மீண்டும் போட்டி

Lankathas Pathmanathan

வதிவிடப் பாடசாலைகளில் முதற்குடி மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகினர்: திருத்தந்தை

Lankathas Pathmanathan

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை – Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC

Lankathas Pathmanathan

Leave a Comment