தேசியம்
செய்திகள்

முதியோர் பாதுகாப்பு ஓய்வூதிய கொடுப்பனவு 10 சதவீதத்தால் அதிகரிப்பு

முதியோர் பாதுகாப்பு ஓய்வூதிய கொடுப்பனவுகளை கனேடிய அரசாங்கம் அடுத்த வாரம் முதல் அதிகரிக்கவுள்ளது.

75 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு முதியோர் பாதுகாப்பு ஓய்வூதியம் 10 சதவீதம் உயரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

50 ஆண்டுகளில் முதியோர் பாதுகாப்பு ஓய்வூதியம் நிரந்தரமாக உயர்வது இதுவே முதல் முறையாகும்.

Liberal கட்சி இந்த அதிகரிப்பை கடந்த தமது தேர்தல் பிரச்சாரத்திலும் பின்னர் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திலும் அறிவித்திருந்தனர்.

பிரதமர் Justin Trudeau 2019ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெறும் – பெருமான்மையா சிறுபான்மையா என்பது கேள்வி?

Gaya Raja

புதிய வீட்டு கட்டுமான தொழில்களுக்கு  திறமையான புதிய குடிவரவாளர்கள் தேவை

Lankathas Pathmanathan

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment