தேசியம்
செய்திகள்

உக்ரேனியர்களுக்கு உதவ போலந்துக்கு படைகளை அனுப்பும் கனடா!

உக்ரேனிய அகதிகளுக்கு உதவுவதற்காக கனேடிய இராணுவத்தினர் போலந்துக்கு பயணமாகின்றனர்.

கனேடியப் படைகளின் இராணுவ தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

போலந்தில் உக்ரேனிய அகதிகள் மீள்குடியேற்ற முயற்சிகளை நிர்வகிப்பதற்கு உதவ 150 கனடிய ஆயுதப் படை உறுப்பினர்கள் அங்கு விரைவில் பயணமாகின்றனர்.

இவர்கள் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் கனடாவிற்கு வர உதவுவது உட்பட அகதிகள் மீள்குடியேற்ற முயற்சிகளில் உதவுவார்கள் என கூறப்படுகிறது.

Related posts

இந்தியா கனடாவின் நம்பகமான வர்த்தக கூட்டாளி: Mark Carney

Lankathas Pathmanathan

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் விடுமுறைக்காக பயணம் மேற்கொண்டது தவறு: Trudeau

Gaya Raja

சர்வதேச சட்டத்திற்கு மாறாக செயல்படும் இந்தியா? – கனடா கண்டனம்!

Lankathas Pathmanathan

Leave a Comment