தேசியம்
செய்திகள்

OPP அதிகாரியின் இறுதிக் கிரியைகள்

கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட Ontario மாகாண காவல்துறை அதிகாரியின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை (04) நடைபெற்றது.

இறுதி நிகழ்வுகளில் OPP அதிகாரி Grzegorz Pierzchala, அவரது குடும்பத்தினர், நண்பர்களினால் நினைவு கூறப்பட்டார்.

வாழ்வின் ஒரு உத்வேகமாக இருந்த தனது சகோதரர் ஒரு வீரனாக இறந்தார் என அவரது சகோதரி இறுதி நிகழ்வில் நினைவு கூர்ந்தார்.

Ontario ஆளுநர் நாயகம் Elizabeth Dowdeswell, மாகாண முதல்வர் Doug Ford, OPP ஆணையர் Thomas Carrique உட்பட பல முக்கியஸ்தர்களும் காவல்துறை அதிகாரிகளும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

December 27ஆம் திகதி Hagersville நகருக்கு அருகில் OPP அதிகாரி Grzegorz Pierzchala சுடப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து 30 வயதான பெண், 25 வயதான ஆண் ஆகியோர் முதலாம் நிலை கொலை குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

Related posts

தனிமை சட்டத்தை மீறிய 77 கனடியர்கள் அபராதம் பெற்றனர்!

Lankathas Pathmanathan

50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment