தேசியம்
செய்திகள்

இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தமிழர்

இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

Bradford West Gwillimbury நகரை சேர்ந்த இருபது வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

2023 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர்ச்சியான சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.

York பிராந்திய காவல்துறை செவ்வாய்க்கிழமை (21) வெளியிட்ட அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின.

18 வயதுக்கு குறைந்தவர் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இரண்டு சிறுமிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இவரினால் மேலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 45 சதவீதம் அதிகரித்தது  

Lankathas Pathmanathan

புதிய குடிவரவாளர்கள் மரணத்தில் இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

திங்கள் முதல் இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகரும் York பிராந்தியம்

Lankathas Pathmanathan

Leave a Comment