February 23, 2025
தேசியம்
செய்திகள்

தைவான் நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலி

தைவானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலியாகினர்.

ஹாங்காங்கை சேர்ந்த இரண்டு கனடியர்களின் உடல்கள் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்டது.

தைவானின் கிழக்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (02) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இவர்கள் பலியாகினர்.

இந்த நிலையில் தைவானில் உள்ள கனடிய குடிமக்கள் கனடிய வெளிவிவகார அமைச்சில் கனடாவில் பதிவு செய்ய வேண்டும் என கோரப்படுகிறது.

வெளியுறவு அமைச்சர் Mélanie Joly புதன்கிழமை (03) இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது ஒன்பது பேர் பலியாகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆலோசனையை  கனடியர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.

தைவானில் உள்ள உதவி தேவைப்படும் கனடியர்கள் அவசர கண்காணிப்பு, பதில் மையத்தை (Emergency Watch and Response Centre) தொடர்பு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் Justin Trudeau தனது ஆதரவை தெரிவித்தார்.

Related posts

கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல்  சட்டத்தை மீறுகின்றனர்!

Lankathas Pathmanathan

இரண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal கட்சி

Lankathas Pathmanathan

Conservative அரசாங்கம் மின்சார வாகனத்துறையில் முதலீடுகளை குறைக்கும்?

Lankathas Pathmanathan

Leave a Comment