தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல்  சட்டத்தை மீறுகின்றனர்!

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல்  சட்டத்தை மீறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல சர்வதேச பயணிகள் மூன்று நாள் விடுதியில் தனிமைப்படுத்தக் கோரும் புதிய விதிக்கு இணங்க மறுத்துவருவதாக இன்று  காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வாரம் நடைமுறைக்கு வந்த COVID தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற மறுத்தவர்களுக்கு Ontarioவின் விதிமுறைகளின் கீழ் 880 டொலர்  அபராதம் விதிக்கப்பட்டதாகவும் Peel  பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர். தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக எவரையும் தடுத்து வைக்க மாட்டோம் எனவும்  காவல்துறையினர் கூறினர்.

தனிமைப்படுத்தல்  சட்டத்தின் கீழ் பயணிகளுக்கு  அபராதம் விதிக்கும் பொறுப்பு கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தை சார்ந்தது எனவும் Peel  பிராந்திய காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Related posts

மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவு

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கத்திற்கு உக்ரைன் முன்னுரிமையாக இருக்க வேண்டும்: Conservative கட்சி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் நிலை: புதிய கருத்து கணிப்புகள்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!