February 23, 2025
தேசியம்
செய்திகள்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (23) காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

காலை நடைபெற்ற அவசர ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து ஆலோசனைக் குழுக்கூட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது.

நகரசபை மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக Edmonton காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணையின் பின்னர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

Quebecகில் மறு வாக்கு எண்ணிக்கை: 12 வாக்குகளால் Liberal கட்சி வேட்பாளர் வெற்றி

Gaya Raja

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தில் கனடிய அரசு?

Lankathas Pathmanathan

மத்திய அரசின் சுகாதாரப் பாதுகாப்பு நிதி உதவியை ஏற்க முதல்வர்கள் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment