தேசியம்
செய்திகள்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (23) காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

காலை நடைபெற்ற அவசர ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து ஆலோசனைக் குழுக்கூட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது.

நகரசபை மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக Edmonton காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணையின் பின்னர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பனிப்புயல் காரணமாக மின்சாரத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி

Lankathas Pathmanathan

4.5 சதவீதமாக அதிகரிக்கும் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

Leave a Comment