February 23, 2025
தேசியம்
செய்திகள்

Yellowknife நகருக்கு படிப்படியான வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த அதிகாரிகள்

Yellowknife நகரில் இருந்து படிப்படியான வெளியேற்ற உத்தரவை Northwest பிரதேசங்களின் அதிகாரிகள் விடுத்தனர்.

Yellowknife நகரின் எல்லையை காட்டுத்தீ எட்டியுள்ள நிலையில் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காட்டுத்தீ நகரத்திற்கு வெளியே சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் எரிந்து வருவதாக புதன்கிழமை (16) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Northwest பிரதேசங்களின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சர் Shane Thompson கூறினார்.

இந்த நிலையில் காட்டுத்தீ வார இறுதியில் நகரின் புறநகரை அடையும் சாத்தியம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.

Yellowknife நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நாளின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் Northwest பிராந்திய முதல்வர் Caroline Cochrane புதன்கிழமை (16) பிரதமர் Justin Trudeauவுடன் உரையாடியுள்ளார்.

இந்த உரையாடலில் Northwest பிராந்தியத்திற்கு மத்திய அரசின் முழு ஆதரவும் இருப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.

Related posts

கனேடியரின் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

கனடாவில் நிகழ்ந்த வன்முறையில் இந்திய அரசின் மூத்த அமைச்சருக்கு தொடர்பு?

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment