தேசியம்
செய்திகள்

தொற்றை எதிர்கொள்ள கனடிய பொது சுகாதார நிறுவனம் தயாராக இருக்கவில்லை: கணக்காய்வாளர் நாயகம்!

ஒரு தொற்றை எதிர்கொள்ள கனடிய பொது சுகாதார நிறுவனம் தயாராக இருக் கவில்லை என கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

COVID தொற்றின் கையாளுதல் குறித்த ஒரு கடினமான மதிப்பாய்வை  கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் Karen Hogan நேற்று வெளியிட்டார். COVID போன்ற ஒரு தொற்றின் ஆபத்தை பொது சுகாதார நிறுவனம் குறைத்து மதிப்பிட்டது எனவும் அவர் வெளியிட்ட தனது அறிக்கையில் கூறினார்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக எச்சரிக்கைகள், திட்டமிடல், அரசாங்க நிதி ஒதுக்கீடு இருந்த போதிலும் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த உலகளாவிய தொற்று நோய்க்கு தயாராக இருக்கவில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். இந்த தொற்றின் ஆரம்ப கட்டங்களில் அது முன்வைத்த அச்சுறுத்தலை பொது சுகாதார நிறுவனம் குறைத்து மதிப்பிட்டதாகவும் கணக்காய்வாளர் நாயகம் கூறினார் .

Related posts

Ottawaவில் போராட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள்ள கைது!

Lankathas Pathmanathan

கனடாவில் மூன்றாவது தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும்

Lankathas Pathmanathan

October மாதத்தின் பின்னர் Ontarioவில் முதல் முறையாக COVID மரணங்கள் இல்லை

Gaya Raja

Leave a Comment