February 23, 2025
தேசியம்
செய்திகள்

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த ஆலோசனை பொறிமுறை ஆரம்பம்!

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்கும் ஆலோசனை பொறிமுறை ஒன்றை சமூக மைய இயக்குநர் குழு ஆரம்பித்துள்ளது.

இதற்காக இந்த மாதம் ஒரு புதிய இணைய மூலம் கலந்தாய்வு முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் சமூக மையத்தின் இயக்குநர் குழு இந்தத் திட்டம் குறித்த நிலவர அறிவிப்பை திங்கட்கிழமை வெளியிட்டது.

அதிகரித்த கட்டுமான வரவு செலவுத் திட்டத்துடன், தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்க இணைய மூலம் கலந்தாய்வு எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தவிரவும் எதிர்வரும் 21ஆம் திகதி ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவும் தமிழ் சமூக மையத்தின் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது.

Related posts

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

Omicron பரவலுக்கு மத்தியில் Decemberரில் 700,000 கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர்

Lankathas Pathmanathan

கனடிய இளையோர் hockey அணி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment