February 23, 2025
தேசியம்
செய்திகள்

Waterloo விமான நிலையத்தில் ஓடு பாதையை கடந்து சென்ற விமானம்

Waterloo சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடு பாதையை கடந்து சென்ற சம்பவம் நிகழ்ந்தது.

Flair Airlines விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (25) காலை ஓடுபாதையை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.

Vancouver நகரில் இருந்து Kitchener-Waterloo பயணமான இந்த விமானம் காலை 6:30 அளவில் தரையிறங்கியதும் ஓடுபாதையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் 134 பயணிகளும் ஆறு பணியாளர்களும் இருந்தனர் என Flair விமான நிறுவனம் தெரிவித்தது.

இதில் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் கூறுகிறது.

TSB எனப்படும் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் Waterloo சர்வதேச விமான நிலையம் வணிகப் போக்குவரத்திற்காக வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

இந்த நிலையில் விமானம் ஓடுபாதையை விட்டு வெளியேற என்ன காரணம் என்பது தெரியவரவில்லை.

Related posts

30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்படலாம்: NACI பரிந்துரை

Gaya Raja

உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க கனடா உதவும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment