தேசியம்
செய்திகள்

கனடா – அமெரிக்கா போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதை போக்குவரத்து மீண்டும் திறக்கப்படுவதாக கனடிய அதிகாரிகள் புதன்கிழமை (22) மாலை அறிவித்தனர்.

கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் Rainbow பாலத்தில் வாகனம் வெடித்து சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

பாலத்தின் அமெரிக்க பக்கத்தில் புதன்கிழமை காலை 11:30 மணிக்கு முன்னர் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என்ற அனுமானத்தின் கீழ் கனடிய அரசாங்க அதிகாரிகள் செயல்பட்டனர்.

இதன் காரணமாக, பயங்கரவாத இலக்குகளில் தங்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகள் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர்.

இந்த குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அதிகாரிகள் Rainbow பாலம் உட்பட மூன்று Niagara எல்லைக் கடவைகளை மூடினர்.

எனினும், புதன் மாலை 5 மணிக்குப் பின்னர் Whirlpool பாலம், Peace பாலம், Queenston-Lewiston பாலம் ஆகியவை போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்படுவதாக Ontario மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்

ஆனாலும் Rainbow பாலம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

ஆனாலும் Ontarioவில் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என OPP ஒரு அறிக்கையில் தெரிவித்தது

Related posts

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25-ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கனடாவில்

Lankathas Pathmanathan

ஊடக அறமற்றது: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News செய்திக் கட்டுரையை கண்டிக்கும் கனடிய தமிழர் கூட்டு!

Lankathas Pathmanathan

ஆங்கிலம், பிரஞ்சு தவிர்ந்த வேறு மொழி Ontario சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அனுமதி!

Lankathas Pathmanathan

Leave a Comment