தேசியம்
செய்திகள்

இத்தாலி கனடியர்களிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த கனடியர்களை தடுத்து வைத்ததற்கு கனடிய பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார்.

வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது  பிரதமர் Justin Trudeau இத்தாலி கனடியர்களிடம் மன்னிப்பு கோரினார். இத்தாலி கனேடிய சமூகம்  தடுத்து வைக்கப்பட்டது  நியாயமற்றது என பிரதமர் தனது மன்னிப்பில் குறிப்பிட்டார்.

Trudeauவின் மன்னிப்பைத் தொடர்ந்து Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole,  NDP தலைவர்  Jagmeet Singh உட்பட பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும்  கருத்து தெரிவித்தனர்.

1990 ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர்  Brian Mulroney இதே விடயத்திற்காக இத்தாலி கனேடிய சமூகத்திடம் மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைனில் போரை தீவிரப்படுத்தும் ரஷ்யாவின் நகர்வை கண்டிகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

213,000 பேர் CERB உதவித் தொகையை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது: CRA

Lankathas Pathmanathan

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் Quebecகின் முடிவுக்கு எதிர்ப்பு: Erin O’Toole

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!