தேசியம்
செய்திகள்

சூடான் தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த கனடா முடிவு

சூடானில் உள்ள தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கனடா முடிவு செய்துள்ளது.

சூடானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஞாயிற்றுக்கிழமை (23) கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

சூடானின் தலைநகரில் உள்ள தனது தூதரகத்தை கடந்த திங்கட்கிழமை (17) கனடா மூடியுள்ளது.

தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்த முடிவை கனடிய அரசாங்கம் எடுத்துள்ளது.

சூடானுக்கு பயண ஆலோசனையும் கடந்த வாரம் கனேடிய அரசாங்கத்தினால் புதுப்பிக்கப்பட்டது.

சூடானுக்கு அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு அந்த பயண ஆலோசனை அறிவுறுத்துகிறது.

சூடானில் ஏற்கனவே உள்ள கனடியர்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கியிருக்குமாறும் கனடிய அரசாங்கம் கோரியுள்ளது.

Related posts

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்த அரசு மத்திய வங்கியிடம் கோர வேண்டும்

Lankathas Pathmanathan

மற்றொரு பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒன்ராறியோ

Gaya Raja

முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் மேலும் கல்லறைகள்?

Leave a Comment