தேசியம்
செய்திகள்

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்த அரசு மத்திய வங்கியிடம் கோர வேண்டும்

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்துமாறு கனடிய வங்கியிடம் மத்திய அரசு கோர வேண்டும் என NDP தெரிவிக்கின்றது.

இந்த விடயத்தில் British Columbia மாகாண அரசாங்கத்தின் வழியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என புதிய ஜனநாயகக் கட்சி தெரிவித்தது

British Columbia மாகாண முதல்வர் David Eby கடந்த வாரம் மத்திய வங்கிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டாம் என British Columbia மாகாண முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்த நகர்வை NDP தலைவர் Jagmeet Singh பாராட்டினார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நாயகத்திற்கும் மத்திய நிதியமைச்சருக்கும் இடையிலான இணக்கப்பாடுகளின் ஒரு பகுதியாக, Liberal அரசாங்கம் வட்டி விகித உயர்வை நிறுத்துமாறு மத்திய வங்கியிடம் கோர வேண்டும் என NDP தெரிவித்தது.

வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என மத்திய வங்கி புதன்கிழமை அறிவித்தது.

Related posts

Liberal அரசாங்கத்தின் அணுகுமுறை வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பை தூண்டியது: O’Toole குற்றச் சாட்டு!

Gaya Raja

ஐ.நா. காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் சிறந்த பரிசை வென்ற கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர்

Lankathas Pathmanathan

மத்திய அரசின் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment