தேசியம்
செய்திகள்

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

ஜெருசலேம் இரட்டை குண்டுவெடிப்பில் கனடியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜெருசலேமில் பேருந்து தரிப்பிடங்களுக்கு அருகே புதன்கிழமை (23) காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் ஒரு கனேடிய-இஸ்ரேலிய இளைஞன் பலியானதுடன் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.

பலியானவர் 15 வயதான Aryeh Schupak என அடையாளம் காணப்பட்டார்.

இவர் ஒரு கனடிய குடிமகன் என இஸ்ரேலுக்கான கனடிய தூதர் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதலில் கனடிய இளைஞன் உயிரிழந்ததை அறிந்து வருத்தம் அடைவதாக இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

Related posts

நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Gaya Raja

Brampton தமிழர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் 1 மில்லியன் டொலர் வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment