தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு முடிவுக்கு வரும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடிய பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை  முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் இருந்து  இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் Patty Hajdu அறிவித்தார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடிய பயணிகளுக்கு விடுதிகளில் தங்குவது, 14 நாள் தனிமைப்படுத்தல் ஆகிய நடைமுறைகள்  முடிவுக்கு வரவுள்ளன. எல்லை நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக தளர்த்துவதற்கான முதல் கட்டத்தை சுகாதார அமைச்சர் Hajdu அறிவித்தார்.

COVID தொற்று காரணமாக கனடா அத்தியாவசியமற்ற பயணத்தை தடைசெய்த ஒரு வருடத்திற்கும் மேலாக காலத்தின் பின்னர் இந்த அறிவித்தல் வெளியானது. இந்த மாற்றங்கள் புதிய தொற்றுக்களின்  எண்ணிக்கை, தடுப்பூசி விகிதங்களின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது எனவும் அமைச்சர் கூறினார்.

ஏனைய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அல்லது முழுமையாக தடுப்பூசி பெறாத கனேடியர்கள் சுதந்திரமாக பயணிக்க இன்னும் சில காலம் எடுக்கும் என மத்திய அரசு கூறுகிறது. அதேவேளை vaccine passport போன்ற தடுப்பூசி ஆவணங்களின் ஆதாரம் எவ்வாறு அமையும் என்பது குறித்து மாகாணங்களுடன் தொடர்ந்தும் ஆலோசித்து வருவதாக அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.

Related posts

காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடாவுக்கு அமெரிக்கா உதவி

Lankathas Pathmanathan

Ontarioவில் மூன்று வாரங்களில் முதல் முறையாக 200க்கும் அதிகமான தொற்றுக்கள் !

Gaya Raja

பழங்குடியின பெண்களை பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தவறி வருகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment