February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!

கனடிய தமிழர் பேரவையின் (Canadian Tamil Congress – CTC) அலுவலகம் மீது தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவையின் அலுவலகம் சனிக்கிழமை (27) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.

கனடிய தமிழர் பேரவை ஒரு அறிக்கையில் இந்த தகவலை உறுதிப்படுத்தியது

 

இந்த கண்டிக்கத்தக்க செயல் வெறுப்பால் தூண்டப்படுவதாக CTC தெரிவிக்கிறது.

இந்த வெறுப்புக்கு எதிராக சமூக ஒற்றுமையை அந்த அறிக்கையில் CTC வலியுறுத்துகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் முறையிடப்பட்டுள்ளதாக CTC தெரிவிக்கிறது.

காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

 

Related posts

சீனாவுக்கு எதிரான கனடாவின் பொருளாதாரத் தடை

Gaya Raja

ISIS முகாமில் இருந்து கனடிய குடும்பம் நாடு திரும்புகிறது

Lankathas Pathmanathan

தலைமைப் பதவி போட்டியில் வாக்களிக்க தகுதிபெற்ற 400,000 Liberal ஆதரவாளர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment