தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை May இறுதிக்குள் தீர்மானிக்கப்படும்

கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளரின் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிரதமர் Justin Trudeau, வெளிநாட்டு குறுக்கீடு சிறப்பு அறிக்கையாளர் David Johnstonனின் ஆணையை செவ்வாய்கிழமை (21) வெளியிட்டார்.

இந்த ஆணை, பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான பொது விசாரணை தேவையா என்பதை May மாதம் 23ஆம் திகதிக்குள் தீர்மானிக்குமாறு முன்னாள் ஆளுநர் நாயகத்திற்கு அறிவுறுத்துகிறது.

அவரது முழுமையான பணியும் எதிர்வரும் October 31ஆம் திகதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Related posts

சனிக்கிழமை கைவிடப்படும் அனைத்து COVID எல்லைக் கட்டுப்பாடுகளும்

Lankathas Pathmanathan

இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரி கனடாவில் போராட்டம்

Lankathas Pathmanathan

தலிபான் பிரதிநிதிகளை சத்தித்த கனடா அதிகாரிகள்!

Gaya Raja

Leave a Comment