தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை May இறுதிக்குள் தீர்மானிக்கப்படும்

கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளரின் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிரதமர் Justin Trudeau, வெளிநாட்டு குறுக்கீடு சிறப்பு அறிக்கையாளர் David Johnstonனின் ஆணையை செவ்வாய்கிழமை (21) வெளியிட்டார்.

இந்த ஆணை, பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான பொது விசாரணை தேவையா என்பதை May மாதம் 23ஆம் திகதிக்குள் தீர்மானிக்குமாறு முன்னாள் ஆளுநர் நாயகத்திற்கு அறிவுறுத்துகிறது.

அவரது முழுமையான பணியும் எதிர்வரும் October 31ஆம் திகதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Related posts

வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படும் திட்டங்கள்?

Lankathas Pathmanathan

Ontario பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் மொராக்கோவில் கைது?

Lankathas Pathmanathan

COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயார்: தலைமை மருத்துவர்

Lankathas Pathmanathan

Leave a Comment