தேசியம்
செய்திகள்

கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை நீக்கப்பட்டுள்ளது!

கனடாவின் கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது என அமைச்சர் Karina Gould தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான சேவை நேரங்கள் தொற்றுக்கு முந்தைய தர நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாக அமைச்சர் செவ்வாய்கிழமை (21) கூறினார்.

கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் செயலாக்கும் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் அமைச்சர் Karina Gould தெரிவித்தார்.

இணையத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்கும் புதிய வழிமுறையையும் அமைச்சர் செவ்வாயன்று அறிவித்தார்.

Related posts

Saskatchewanனிலும் புதிய COVID கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Gaya Raja

Quebec: பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க $603 மில்லியன் ஐந்தாண்டுத் திட்டம்

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  மல்கம் பொன்னையன்

Gaya Raja

Leave a Comment