February 21, 2025
தேசியம்
செய்திகள்

இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகளை நியாயப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சர்

கனடிய இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகளை பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்துகின்றார்.
பல மாத கால ஆய்வுக்கு மத்தியில் உள்ள இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகள் நியாயமானவை என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான தடுப்பூசி நிபந்தனைகளை வேலைவாய்ப்புக்கான நிபந்தனையாக இராணுவம் தொடர்ந்து பயன்படுத்துவதை Liberal அரசாங்கம் நியாயப்படுத்துகின்றது.
அனைத்து துருப்புக்களும் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட COVID  தடுப்பூசிகளை  பெற வேண்டும் என கனேடிய ஆயுதப் படைகள் கடந்த December மாதத்தில் இருந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்த நிபந்தனையை பின்பற்றாதவர்கள் இராணுவத்திலிருந்து கட்டாயமாக அகற்றப்படுவது உட்பட ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறப்பட்டது.
1,100 இராணுவ உறுப்பினர்கள் இந்த நிபந்தனையை பின்பற்றவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இதுவரையிலும் தடுப்பூசி போட மறுத்த 299 உறுப்பினர்கள் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related posts

முகமூடி கட்டுப்பாடுகள் April 30 வரை நீட்டிப்பு: Quebec

Lankathas Pathmanathan

சுய-தனிமை காலத்தில் மாற்றம் – சோதனை விதிகளில் மாற்றம்: Ontario மாகாணம் அறிவித்தல்

Lankathas Pathmanathan

Freedom Convoy ஆர்ப்பாட்டத்திற்கு $25 மில்லியன் திரட்டப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment