February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய அரசாங்கம் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை: அமைச்சர் தகவல்

கனடிய அரசாங்கம் COVID தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.

இந்த நிலையில் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளுக்கு மாகாணங்களே பொறுப்பு எனவும் அமைச்சர் கூறினார். சுமார் 8 இலட்சம் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் சேமிப்பில் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்தவுடன் மாகாணங்களுக்கும்  பிரதேசங்களுக்கும்  வழங்கப்படுவதாகவும்  அமைச்சர்  ஆனந்த் கூறினார்.

இதுவரை கனடா 4.7 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுள்ளதாக கூறிய அமைச்சர், அவற்றில் 73 சதவீதமானவை கனடியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Related posts

கனடாவில் புதிய Omicron துணை திரிபின் 50க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

ஆப்கானியர்கள் தொடர்ந்து கனடாவுக்கு வரவேற்கப்படுவார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja

கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீடு வலையமைப்புகள் ஆழமாக உட்பொதிந்துள்ளன: CSIS

Lankathas Pathmanathan

Leave a Comment