September 19, 2024
தேசியம்
செய்திகள்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற முன்னாள் கனடிய தமிழர்

முன்னாள் கனடிய தமிழர் கதிரவேலு சண்முகம் குகதாசன் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மறைவை அடுத்து செவ்வாய்க்கிழமை (02) திருமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை நாடாளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பிக்கப்பட்ட போது , சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் கதிரவேலு சண்முகம் குகதாசன் பதவியேற்றார்.

திருமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார்.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் கதிரவேலு சண்முகம் குகதாசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றார்.

இவர் 2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்டக் கிளை தலைவராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலை வெற்றிடங்கள் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்

Lankathas Pathmanathan

Toronto பெரும்பாக இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்

Lankathas Pathmanathan

Leave a Comment