தேசியம்
செய்திகள்

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு படை உறுப்பினர் மரணம்

தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கனேடிய தீயணைப்பு படை உறுப்பினர் கொல்லப்பட்டார்.

Northwest பிரதேசங்களில் தொடரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை உறுப்பினர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாரிகள் ஒரு அறிக்கையில் இந்த மரணத்தை உறுதிப்படுத்தினர்.

பலியான தீயணைப்பு படையினரின் பெயர் விபரங்கள் எதையும் அரசாங்கம் வெளியிடவில்லை.

தற்போது 89 காட்டுத் தீகள் Northwest பிராந்தியத்தில் எரிந்து வருகின்றன.

அங்கு காட்டுத் தீயின் காரணமாக 8 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர், British Columbiaவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 19 வயதான ஒருவர் கொல்லப்பட்டார்.

இவர் Devyn Gale என அவரது சகோதரனால் அடையாளம் காணப்பட்டார்.

Related posts

நாடளாவிய ரீதியில் பனிப்புயல் – மழைப் பொழிவு எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் தேசிய அவைக்கு எதிராக கனடியத் தமிழர் பேரவை அவதூறு வழக்கு

Lankathas Pathmanathan

தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த பிரதமர்!

Gaya Raja

Leave a Comment