தேசியம்
செய்திகள்

தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

கனடியத் தமிழர்களின் தொடர் பங்களிப்பிற்கு பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார்.

திங்கட்கிழமை (17) நடைபெற்ற தைப்பொங்கல், தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்.

தமிழ்க் கனடியர்கள் இந்த நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டு துறையில் வழங்கும், பங்களிப்பிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

மெய்நிகர் வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் தமிழரான பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், Toronto நகர முதல்வர் John Tory,, நகரசபை உறுப்பினர்கள், தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளது: Statistics கனடா

Gaya Raja

புதிய தொற்றுகளின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் வீழ்ச்சி!

Gaya Raja

Toronto காவல்துறை அதிகாரி மீது Brampton நகர இளைஞனின் கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment