February 22, 2025
தேசியம்
செய்திகள்

வாகன திருட்டு, வீட்டுக் கொள்ளை விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைது

வாகன திருட்டு, வீட்டுக் கொள்ளை விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று கைதுகள் குறித்து Toronto காவல்துறை பொதுமக்களுக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளது.

November 1 ஆம் திகதி Peel நகரில் நிகழ்ந்த வாகன திருட்டு, November 13 ஆம் திகதி Toronto நகரில் நிகழ்ந்த இரண்டு வீட்டுக் கொள்ளை, November 18 ஆம் திகதி Toronto நகரில் நிகழ்ந்த வாகன விபத்து குறித்த விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

கைதானவர்களில் Markham நகரை சேர்ந்த 33 வயதான அபிரா பொன்னையா, Pickering நகரை சேர்ந்த 31 வயதான அனெஸ்டன் கணேசமூர்த்தி ஆகியோரும் அடங்குகின்றனர்.

தவிரவும் Toronto நகரை சேர்ந்த 19  வயதான Khasim Mohammed என்பவரும் இந்த விசாரணையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இந்த விசாரணை தொடரும் நிலையில், மேலும் குற்றச்சாட்டுகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja

வாகன திருட்டு விசாரணை: 51 பேர் கைது. 215 வாகனங்கள் மீட்பு.

Lankathas Pathmanathan

தடுப்பூசிக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில் கனடா: வைத்தியர் Edward Njoo

Gaya Raja

Leave a Comment