September 18, 2024
தேசியம்
செய்திகள்

மழை காரணமாக Quebec மாகாணத்தில் அவசர நிலை

Quebec மாகாணத்தின் Chelsea நகராட்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (09) பெய்த கடுமையான மழை காரணமாக Chelsea நகராட்சி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது.

வெள்ளியன்று பெய்த கனமழையால் சில முக்கிய சாலைகள் கடுமையான சேதத்தை எதிர்கொண்டதை அடுத்து, உள்ளூர் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

இந்த அவசர கால நிலை, சேதங்களை மதிப்பிடவும், சாலைகளை போக்குவரத்திற்கு விரைவாக மீட்டெடுக்கவும் பணியாளர்களை அனுமதிக்கும் என நகராட்சி கூறுகிறது.

அவசரநிலை பிரகடனம் குறைந்தது 48 மணி நேரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என நகரத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை Chelsea நகராட்சியில் 83 mm மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Related posts

கனடாவில் Moderna mRNA தடுப்பூசி உற்பத்திக்கான உடன்பாடு!

Gaya Raja

NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Raptors அணி

Lankathas Pathmanathan

உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment