February 23, 2025
தேசியம்
செய்திகள்

Kingston நகருக்கு வடக்கே படகு விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம்!

Ontario மாகாணத்தின் Kingston நகருக்கு வடக்கே ஏரியில் படகு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர்.

சனிக்கிழமை இரவு படகு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் – ஐந்து பேர் காயமடைந்தனர்.

Bobs Lake பகுதியில் இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக Ontario மாகாண காவல்துறை (Ontario Provincial Police – OPP) தெரிவித்தது.

பலியானவர்கள்:

• 21 வயதான பெண் (South Frontenac Township)

• 22 வயதான பெண் (Elginburg)

• 23 வயதான ஆண் (South Frontenac)

காயமடைந்த ஏனைய ஐவரும் 21 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள்.

காயமடைந்தவர்கள் Kingston மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் கடுமையான காயங்களுடன் Ornge Air மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக OPP செய்தித் தொடர்பாளர் Bill Dickson ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Related posts

6 மில்லியன் டொலர் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் கைது

Lankathas Pathmanathan

5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி தகுதியில் மாற்றம்

Lankathas Pathmanathan

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் இழந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment