February 23, 2025
தேசியம்
செய்திகள்

பயங்கரவாத குழுவொன்றின் கொடியை ஏந்திச் சென்ற நபர் கைது

பயங்கரவாத குழுவொன்றின் கொடியை ஏந்திச் சென்ற நபர் மீது பகிரங்கமாக வெறுப்புணர்வைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

Toronto நகரத்தில் பயங்கரவாதக் குழுவின் கொடியை ஏந்திச் சென்றதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த கைது குறித்து Toronto காவல்துறையினர் வியாழக்கிழமை (11) அறிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை, Torontoவைச் சேர்ந்த 41 வயதான Maged Sameh Hilal Al Khalaf என்பவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

இவர் கனடிய அரசாங்கத்தினால் பயங்கரவாதக் குழுவாக பட்டியலிடப்பட்ட அமைப்பின் கொடியை ஏந்திச் சென்றதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனாலும் அந்தக் குழுவின் விவரங்கள் காவல்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Related posts

முதலாவது ஈழ தமிழர் கனடாவில் அமைச்சராக பதவியேற்றார்

Lankathas Pathmanathan

Mississauga நகர முதல்வர் இடைத்தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரித்த வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

Leave a Comment