February 22, 2025
தேசியம்
செய்திகள்

சட்டவிரோத மருந்துகளால் பலியாகும் முதற்குடியினர் எண்ணிக்கை அதிகரிப்பு

சட்டவிரோத மருந்துகளால் British Colombia மாகாணத்தில் பலியாகும் முதற்குடியினர் சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

British Colombia மாகாணத்தில் முதற்குடியினர் சமூகத்தில் சட்டவிரோத மருந்துகளால் கடந்த ஆண்டு 373 பேர் மரணமடைந்தனர்.

இது சட்டவிரோத மருந்துகளால் British Colombia மாகாணத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையில் 16.4 சதவீதமாகும்.

ஆனாலும் British Colombia மாகாணத்தின் மக்கள் தொகையில் 3.3 சதவீதம் மட்டுமே முதற்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சட்டவிரோத மருந்துகளால் முதற்குடியினர் சமூகத்தினர் பொது மக்களை விட 5.9 மடங்கு அதிகமாக மரணமடைகின்றனர் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

சட்டவிரோத மருந்துகளால் ஏற்படும் மரணம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் British Colombiaவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது.

அன்றில் இருந்து குறைந்தது 11 ஆயிரத்து 807 பேர் சட்டவிரோத மருந்துகளால் British Colombiaவில் பலியாகியுள்ளனர்.

Related posts

Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை

Lankathas Pathmanathan

Rolling Thunder எதிர்ப்பு பேரணி வாகனங்கள் Ottawa நகரத்தில் இருந்து தடை செய்யப்படும்

Lankathas Pathmanathan

அனைத்து மட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்ட முன்னாள் Toronto நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

Leave a Comment