February 23, 2025
தேசியம்
செய்திகள்

பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் தகுந்த முறையில் செயல்படுகிறது: அமைச்சர் Mendicino

ஒழுங்கற்ற எல்லை கடவைகள் ஊடான அகதிகளில் வருகை அதிகரித்தாலும் பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் தகுந்த முறையில் செயல்படுகிறது என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino கூறினார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடவைகளை பயன்படுத்தி அதிகரித்த எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்குள் நுழைந்துள்ளனர்.

ஆனாலும் கனேடிய – அமெரிக்க அதிகாரிகள் மூன்றாம் நாடு ஒப்பந்தத்தை நவீனமயமாக்க தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் வருபவர்களை இடைமறிக்கும் பணியில் RCMP ஈடுபட்டுள்ளதை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

Related posts

ஹமாசுடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியருக்கு நாடு கடத்தல் உத்தரவு

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

முதலாவது  சர்வதேச பயணத்தை ஆரம்பித்துள்ள ஆளுநர் நாயகம்! 

Gaya Raja

Leave a Comment