தேசியம்
செய்திகள்

F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய கனடா முடிவு

கனடிய விமானப்படையின் உபயோகத்திற்காக F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை (09) இதனை உறுதிப்படுத்தினார்.

Royal கனேடிய விமானப்படையின் CF-18 விமானங்களுக்கு பதிலாக F-35 ரக விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

இந்த கொள்வனவுக்கு அமெரிக்க F-35 தயாரிப்பாளருடன் கனடா ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதிப்படுத்தினார்.

16, F-35 விமானங்களின் கொள்வனவுக்காக 7 பில்லியன் டொலர் நிதி உதவியை தேசிய பாதுகாப்புத் துறை பெற்றதாக கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

மேலும் 72 F-35 ரக விமானங்கள் அடுத்த ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் கனடாவின் எதிர்ப்பு விமானங்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆக அதிகரிக்க உள்ளது.

88 விமானங்களையும் கொள்வனவு செய்வதற்கான செலவை சுமார் 19 பில்லியன் டொலர் என அமைச்சர் அனிதா ஆனந்த் நிர்ணயித்தார்.

Related posts

ஈரானிய உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை

Lankathas Pathmanathan

Saskatchewanனிலும் புதிய COVID கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Gaya Raja

Ontario Liberal தலைமையின் முதல் வேட்பாளர்

Leave a Comment