February 22, 2025
தேசியம்
செய்திகள்

நடைமுறைக்கு வந்த சீன விமானப் பயணிகளுக்கான விதிமுறை

சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு COVID சோதனையை கோரும் விதி முறை வியாழக்கிழமை (05) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகிய நாடுகளை விட்டு வெளியேறும் விமானப் பயணிகள், இன்று முதல் கனடாவிற்குள் நுழையும் போது, எதிர்மறையான COVID சோதனைக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்.

சீனாவில் COVID தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது

இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த இரண்டு வயதிற்கும் மேற்பட்ட அனைத்து விமானப் பயணிகளுக்கும் இந்த சோதனை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மீது விதிக்கப்பட்ட கனடிய அரசின் இந்த கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.

Related posts

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணைக்கு எதிராக பரிந்துரை

Lankathas Pathmanathan

போலந்து பிரதமர் – கனடிய பிரதமர் சந்திப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment