February 23, 2025
தேசியம்
செய்திகள்

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

ஜெருசலேம் இரட்டை குண்டுவெடிப்பில் கனடியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜெருசலேமில் பேருந்து தரிப்பிடங்களுக்கு அருகே புதன்கிழமை (23) காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் ஒரு கனேடிய-இஸ்ரேலிய இளைஞன் பலியானதுடன் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.

பலியானவர் 15 வயதான Aryeh Schupak என அடையாளம் காணப்பட்டார்.

இவர் ஒரு கனடிய குடிமகன் என இஸ்ரேலுக்கான கனடிய தூதர் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதலில் கனடிய இளைஞன் உயிரிழந்ததை அறிந்து வருத்தம் அடைவதாக இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

Related posts

தாயில்லாமல் திருப்பி அனுப்பப்படவுள்ள சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள்

Lankathas Pathmanathan

இந்த வாரம் கனடாவில்: -50 C வரை வீழ்ச்சி அடையும் குளிர்நிலை – 40 centimeter பனி

Lankathas Pathmanathan

B.C. நெடுந்தெரு விபத்தில் மூவர் மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment