February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடா நோக்கி பயணித்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூழ்கிய படகில் இருந்து மீட்பு?

கனடாவை நோக்கி பயணித்ததாக நம்பப்படும் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மூழ்கிய படகில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழ் அகதிகள் ஆபத்தில் இருக்கக்கூடும் என திங்கள் காலை அறிந்தவுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதியதோடு, இந்த விடயம் தொடர்பாக கனேடியப் பிரதிநிதியிடம் நேரடியாகப் பேசியதாக கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தேசியத்திடம் உறுதிப்படுத்தினார்.

தமிழ் அகதிகளை வியட்நாமில் தரையிறக்க அனுமதிக்கும் அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்பதை முழுமையாக உணர்ந்தாலும், இது போன்ற ஆபத்தான பயணங்களும் அதன் விளைவுகளும் பேரழிவை ஏற்படுத்தும் என ஹரி ஆனந்தசங்கரி நினைவு படுத்தியுள்ளார்.

தனது அலுவலகம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைத் தொடரும் என உறுதியளித்த ஹரி ஆனந்தசங்கரி, UNHCR, வியட்நாம் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராவுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் மாகாணசபை உறுப்பினர்களாக பதவி ஏற்ற இரண்டு தமிழர்கள்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment