February 23, 2025
தேசியம்
செய்திகள்

வியாழக்கிழமை மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை (15) சிறப்பு நாடாளுமன்ற அமர்வொன்றில் கலந்து கொள்வார்கள்.

மகாராணியின் மறைவுக்காக கடந்த வியாழக்கிழமை முதல் பிரதமர் Justin Trudeau அறிவித்த உத்தியோகபூர்வ துக்க காலத்தின் மத்தியில் கனடா தொடர்ந்தும் உள்ளது.

மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க இருந்த நாடாளுமன்ற அமர்வுகள், மகாராணியின் இறுதி சடங்கிற்காக ஏற்கனவே ஒரு நாள் தாமதமாக ஆரம்பிக்கிறது.

இதேவேளை மகாராணியின் இறுதி சடங்கிற்கு பயணிக்கும் கனேடிய அதிகாரிகள் தூதுக் குழுவில் யார் இடம் பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க, இங்கிலாந்தின் அரசுடனும், எதிர்க்கட்சித் தலைவர்களின் அலுவலகங்களுடன் தனது அரசு விவாதித்து வருவதாக பிரதமர் Trudeau தெரிவித்தார்.

Related posts

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

Ottawaவில் போராட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள்ள கைது!

Lankathas Pathmanathan

பொது ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment