February 23, 2025
தேசியம்
செய்திகள்

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடரும்

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடர நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

அரசாங்க சபை தலைவர் முன்வைத்த பிரேரணை Liberal, NDP, பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது

வியாழக்கிழமை (23) முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை 177க்கு 144 என்ற வாக்குகளின் எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையம் மூலம் நாடாளுமன்ற அமர்வுகளிலும் விவாதத்திலும் கலந்து கொள்ள hybrid அமர்வுகள் அனுமதிக்கின்றன.

COVID தொற்றின் ஆரம்பம் முதல் நடைமுறைக்கு வந்த hybrid நடைமுறையைத் தொடர்வதற்கு எதிராக Conservative கட்சியினர் வாதிட்டனர்.

ஆனாலும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அனுமதிப்பது அவசியம் என Liberal கட்சி வலியுறுத்துகிறது.

அதேவேளை வியாழக்கிழமையுடன் கோடை காலத்திற்கான கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவுக்கு வந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் September நடுப்பகுதியில் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வார்கள்.

Related posts

Delta மாறுபாடு COVID தடுப்பூசி இலக்கை மேலும் அதிகரித்துள்ளது: Theresa Tam 

Gaya Raja

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளரின் நியமனம் கேள்விக்குள்ளானது

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை: நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

Lankathas Pathmanathan

Leave a Comment