February 22, 2025
தேசியம்
செய்திகள்

முதற்குடியினர் குழந்தைகள் நல இழப்பீடு ஒப்பந்தத்தை வெளியிட்ட அரசாங்கம்

முதற்குடியினர் குழந்தைகள் நல இழப்பீடு தொடர்பான 40 பில்லியன் டொலர்  ஒப்பந்தத்தை கனடிய அரசாங்கம் வெளியிட்டது.

நிதியில்லாத குழந்தைகள் நல அமைப்பால் பாதிக்கப்படும் முதற்குடியினர் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, அரசாங்கம் 40 பில்லியன் டொலர்  ஒப்பந்தத்தை கொள்கை அடிப்படையில் எட்டியுள்ளது.

கனேடிய வரலாற்றில் இது மிகப்பெரிய ஒப்பந்தம் என சுதேசி உறவுகள் அமைச்சர் Marc Miller கூறினார்.

முதற்குடியினர் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும்  இழப்பீடு வழங்க அரசாங்கம் 20 பில்லியன் டொலர்களை ஒதுக்குகிறது.

மேலும் 20 பில்லியன் டொலர்கள் முதற்குடியினர் குழந்தைகளுக்கான நிதி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைச் சவாலை முடிவுக்குக் கொண்டுவரும் என கூறப்படுகின்றது.

Related posts

அமெரிக்காவிடம் இருந்து 1.5 மில்லியன் தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை கனடா வரும்!

Gaya Raja

தொடரும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள்

Lankathas Pathmanathan

தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவராக Brigadier General Krista Brodie நியமனம்

Gaya Raja

Leave a Comment