February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் இருவர் AstraZeneca தடுப்பூசியால் ஏற்பட்ட இரத்த உறைவால் பாதிக்கப்பட்டனர்!

AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்ட இரண்டு நபர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்.  

60 வயதான இருவரே, AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக Ontario மாகாணம் அறிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் Hamilton நகரை சேர்ந்தவர் என தெரியவருகின்றது.

ஆனாலும்  AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் COVID தொற்றால் பாதிக்கப்படுவதை விட அதிகமாக இருப்பதாக Health கனடா தொடர்ந்தும் பரிந்துரைக்கின்றது.18 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை  பயன்படுத்த Health கனடா ஒப்புதல் அளித்தது. இந்த வார ஆரம்பத்தில், Ontario அரசாங்கம் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசியை  வழங்க ஆரம்பித்தது.

Related posts

Vaughan நகர துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலி

Lankathas Pathmanathan

Torontoவில் மூளைக்காய்ச்சல் நோய் பரவல் குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

OPP அதிகாரி சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment