February 23, 2025
தேசியம்
செய்திகள்

சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

கைது செய்யப்பட்டபோது சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கின்றார்.

Peterboroughவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் Bramtpon நகரைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் என்பவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகின. கடந்த சனிக்கிழமை இரவு எரிபொருள் நிலையமொன்றில் ஒரு வாடிக்கையாளர் குழப்பம் விளைவிப்பதான தொலைபேசி அழைப்பின் பேரில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு அமைதியை மீறுவதான குற்றச்சாட்டில் 39 வயதான சேரன் காசிலிங்கம் கைது செய்யப்பட்டார்

இந்த கைதின் போது இவர் சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக மேலும் இரண்டு குற்றச் சாட்டுக்கள் பதிவாகின. இவர் தன் மீதான குற்றச் சாட்டுக்களை அடுத்த மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவுள்ளார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 26ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam

சர்வதேச சட்டத்திற்கு மாறாக செயல்படும் இந்தியா? – கனடா கண்டனம்!

Lankathas Pathmanathan

கனேடிய தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகின!

Gaya Raja

Leave a Comment