தேசியம்
செய்திகள்

Quebec வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு படையினரை தேடும் பணி தொடர்கிறது

Quebec மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட இரண்டு  தீயணைப்பு படையினரை தேடும் பணி தொடர்கிறது.

காணாமல் போன இரண்டு  தீயணைப்பு படையினரை தேடும் பணி செவ்வாய்கிழமை (02) இரண்டாவது நாளாக தொடர்கிறது.

திங்கள்கிழமை (01) பிற்பகல் முதல் காணாமல் போன தீயணைப்பு படையினரை தேடும் பணி சிறப்பு வான், தரைவழி மீட்புக் குழுக்களினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

23 வயதான Christopher Lavoie, 50 வயதான Régis Lavoie ஆகியோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இருவரும் திங்களன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts

Ontarioவில் 4,000க்கு மேல் பதிவான தொற்றுகள்!

Lankathas Pathmanathan

அமெரிக்க பேருந்து விபத்தில் கனடியர்கள் காயம்!

Lankathas Pathmanathan

வெடிகுண்டு எச்சரிக்கை ; மூடப்பட்ட கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம்

Gaya Raja

Leave a Comment