தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

முன்கூட்டிய வாக்குப்பதிவு முடிவடைந்தது!

பொது தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு திங்களன்று இரவு 9 மணியுடன் முடிவடைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான முன்கூட்டிய வாக்குப்பதிவு நான்கு தினங்கள் தொடர்ந்தது.

இந்த முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் 1.3 மில்லியன் வாக்குகள் பதிவானதாக கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.

இது 2019 பொது தேர்தலின் போது முதல் நாளில் பதிவான முன்கூட்டிய வாக்களிப்பை விட சற்று அதிகரிப்பு ஆகும்.

அதேவேளை 1 மில்லியன் கனடியர்கள் இதுவரை தபால் மூலம் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாக கனேடிய தேர்தல் திணைக்களம் இன்று மாலை தெரிவித்தது .

கனேடியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க செவ்வாய் மாலை 6 மணி வரை பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளக விவகாரங்களில் கனடா தொடர்ச்சியாக தலையிடுகிறது: இந்தியா குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Ontarioவில் நான்காவது நாளாக 700க்கு மேற்பட்ட தொற்றுக்கள் !

Lankathas Pathmanathan

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment