September 16, 2026
தேசியம்
செய்திகள்

இந்த வாரம் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்தது!

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இந்த முதல் வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனேடிய எல்லை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அன்று முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே எல்லை கடக்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலை இந்த வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு தொடர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

இலங்கை வரலாற்றில் கறுப்பு July ஒரு துயரமான அத்தியாயமாகவே உள்ளது: பிரதமர் Mark Carney

Lankathas Pathmanathan

British Colombiaவில் அவசர நிலை பிரகடனம்: முதல்வர் தகவல்!

Lankathas Pathmanathan

இந்த வாரம் 7.1 மில்லியன் தடுப்பூசிகளை கனடா பெறுகின்றது!

Gaya Raja

Leave a Comment