தேசியம்
செய்திகள்

கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு!

கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக Roseanne  Archibald   தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனேடிய வரலாற்றில் பெண் ஒருவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கனடாவின்  ஆளுநர் நாயகம் பதிவிக்கு முதற்குடி பெண் ஒருவர் இந்த வாரம் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 100 நாட்களில், முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த விரும்புவதாக Archilbald கூறினார்.

முன்னாள் வதிவிடப் பாடசாலைகளில் நில குறிப்பற்ற புதைகுழிகள், காணாமல் போன முதற்குடி பெண்கள் மற்றும் சிறுமிகள் போன்றவற்றை அவர் தான் கவனம் செலுத்தவுள்ள விடயங்களாக குறிப்பிட்டார்.

Related posts

வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை

Lankathas Pathmanathan

Justin Trudeau பதவி விலக வேண்டும்: Liberal கட்சிக்குள் வலுக்கும் குரல்

Lankathas Pathmanathan

Quebec இல் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசு!

Gaya Raja

Leave a Comment