September 19, 2024
தேசியம்
செய்திகள்

கொலைக் குற்றச்சாட்டில் Jamaica பிரஜை கனடாவுக்கு நாடு கடத்தல்

Jamaica நாட்டின் பிரஜை ஒருவர் கனடாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

April மாதம் Torontoவில் நிகழ்ந்த ஒரு கத்திக்குத்து தொடர்பாக குற்றச்சாட்டை இவர் எதிர்கொள்கிறார்.

30 வயதான Jason Chambers கடந்த வெள்ளிக்கிழமை (09) கனடா வந்தடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

40 வயதான Mohamed “Mo” Abdalla Mohamed என்பவரின் மரணத்தில் அவர் இந்தக் குற்றச் சாட்டை எதிர்கொள்கிறார்.

அவருக்கு எதிரான குற்றச் சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனடிய அரசுக்கும் – பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

Lankathas Pathmanathan

மீண்டும் முதல்வரானார் Doug Ford

Lankathas Pathmanathan

விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் பயணிகளுக்கு அபராதம் அதிகரிக்கிறது!

Gaya Raja

Leave a Comment