February 23, 2025
தேசியம்
செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு முகாங்களை அகற்றக் கோரும் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவோம்: காவல்துறை

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான முகாம் அகற்றப்பட வேண்டும் என்ற நீதிபதியின் தடை உத்தரவை அமுல்படுத்துவோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான முகாமை அகற்ற Ontario நீதிபதி Markus Koehnen செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டார்.

புதன்கிழமை (03) மாலை 6 மணிக்குள் கூடாரங்களை அகற்றுமாறு செவ்வாய் பிற்பகல் வெளியிடப்பட்ட தடையில் போராட்டக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறை நடவடிக்கை அவர்களின் விருப்பப்படி அமையும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கு இந்த காலக்கெடு பொருந்தும் என Toronto காவல்துறையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தாமகவே முகாங்களை அகற்றி போராட்டத்தை கைவிட திட்டமிட்டார்களா என்பதை போராட்டக்காரர்கள் தெளிவுபடுத்தவில்லை.

May மாதம் 2ஆம் திகதி முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது

தமது கோரிக்கைகளை பல்கலைக்கழகம் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

Related posts

தேவை ஏற்பட்டால் மேலும் வட்டி வீத அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி பரிசீலிக்கும்

Lankathas Pathmanathan

Ontarioவில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ஆரம்பித்த Air Canada

Lankathas Pathmanathan

Leave a Comment